Sunday, December 17, 2006

அகர முதல் எழுத்தெல்லாம...

வணக்கம். ஏற்கனவே குத்துயிரும் குலைுயிருமா இருக்கிற தமிழ் மொழியை துன்புறுத்த கிளம்பி இருக்கும் இன்னொரு ஜீவன்.....நான். ஒரு தமிழ் பதிவு ஆரம்பிக்கலாமானு நான் யோசிச்ச அளவுக்கு புஷ் மாமா ஈராக் மேல போர் தொடுக்க கூட யோசிக்கல.

ஆங்கில பதிவே வாரத்துக்கு ஒரு தடவை போடுற சோம்பேறி ஜன்மதுக்கு தமிழ் பதிவு தேவையானு நீங்க கேட்கிறது நியாயம் தான். இந்த லட்சனத்துல தமிழ்ல எழுத்து பிழை வேற நிறைய இருக்கும். நான் என்ன செய்யட்டும்? குஜ்ரத்துல இருந்ததுநால பள்ளிக்கூடத்தில தமிழ் படிக்க முடியாம போச்சு.

நீங்க குமுதம் படிச்சிருக்கீங்களா? அதுல ஆறு வித்தியாசம்னு ஒரு பகுதி வருமே ஞாபகம் இருக்கா? மூனாவூது வகுப்பு படிக்கும்போது எங்க வீட்டுக்கு குமுதம் வரும். பொம்மை பாத்துட்டு அந்த பகுதிக்கு தான் போவேன். ஆறு வித்தியாசம் கண்டுபிடிச்சு என் அப்பா இல்லைனா அம்மா கிட்ட போயி விடை பகுதியை காட்டி நச்சரிப்பேன். என் அம்மா இது தான் சமயம் னு பாத்து "பேசாம நீயே தமிழ் படிச்சுக்கோ" சொல்லிட்டா. அப்புறம் எழுத்துகூட்டி சுஜாதா, ராஜேஷ் குமார் , குமுதம், ஆனந்த விகடனும் படிச்சு தமிழ் ஆர்வத்தை வளர்துக்கிட்டேன்.

என்னதான் திறமையா ஆங்கிலத்துல எழுதினாலும் தாய்மொழி மாதிரி ஏதுலாயும் நாம உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது. வழக்கம் போல உங்க ஆதர்வும் உங்க உற்சாகமும் தான் இந்த பயணத்துல என்னை வழி நடத்தனும்.

மீண்டும் சந்திப்போம். We will meet....will meet...meet:-)

6 comments:

Arunkumar said...

என்ன தோனுதோ எழுதுங்க... படிக்க நாங்க ரெடி :)

ramya said...

express wat all u feel ...

மண்டு said...

@அருண
எல்லாம் அந்த நம்பிக்கை தான் ் :-)

@One among u
wow....with that sort of an encouragement...perhaps i should do wonders :-)

Dreamzz said...

Wow... neenga tamil padichu eludharadhe enna ketta oru sadhanai! naanga ellam irukkomla, kalakunga!

மண்டு said...

@Dreamzz
aha....horlicks bournvita ellam saapita maadhiri irukku :-)

ramya said...

100% u will do wonders in blog as well as in life..all the best for both .